Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, November 28, 2012

விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

        

       சமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வு எழுதினேன்.
எங்கள் அறைக்கு கண்காணிப்பாளராக வந்த ஆசிரியை
குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்ட பின்பும் ஒஎம்ஆர் [OMR]
ஷீட்டை கொடுக்கவேயில்லை.அனைவரும் வரட்டும்,
 வந்தவுடன் எல்லோருக்கும் ஒன்றாக விளக்கம் சொல்லி
கொடுத்து விடுகிறேன் என காலம் தாழ்த்தினார். பின்
ரவுண்ட்ஸில் வந்த மற்றொரு ஆசிரியையின் நேரம்
ஆகிவிட்ட்து,கொடுத்து விடுங்கள்என்ற அறிவுறுத்தலின்
பேரில் கொடுத்தார்.  இது கூட பரவாயில்லை. தேர்வு
முடிவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் அடிக்கப்படும்
“வார்னிங் பெல்லை இறுதி மணி என நினைத்து
அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கிவிட்டார்.
              அறையை விட்டு பாதி பேர் கலைந்த
தருவாயில் தான் அவருக்கே தெரிய வந்தது, அது
5  நிமிடத்திற்கு முன் அடிக்கப்படும் எச்சரிக்கை மணி
என்று.  பின், எல்லோரும் உள்ளே வாருங்கள், தலைமை
ஆசிரியர் பார்த்தால் பிரச்சனை என அழைப்பு விடுத்தார்.
விடைத்தாளை திரும்ப எங்களிடம் கொடுக்கவும்
இல்லை அதற்காக ஒரு மன்னிப்பு கோரலும் இல்லை.
               5 நிமிடங்கள் என்பது இது போன்ற
அரசுத் தேர்வுகளில் எவ்வளவு முக்கியம் என்பது
அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தேர்வுகளில்
கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்கள் முதலில்
சரியான விதிமுறைகளை  தெரிந்து கொண்டு
வாருங்கள்.  சிரமப்பட்டு படித்து  வரும்
தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.


                       




                         





2 comments:

  1. தேர்வில் வெற்றிபெற வாழ்த்த்க்கள்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete