வேலூரில் தினமலர் வீட்டு உபயோக பொருட்காட்சி ஏற்படுத்திக் கொடுத்த நடந்த ”கதை பயிற்சி”
நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்துமதி அவர்களுடன் வாசகிகளான நாங்கள் மனதளவில் நெருங்கி போனோம். சுமார் மூன்று மணி நேரம் கடந்தததே தெரியவில்லை.
பயிற்சிக்கு செல்வதற்காக
காலையில் வெறும் வயிருடனே ஆரணியிலிருந்து பேருந்தில் ஏறிவிட்டேன். மதியம் 2.30 மணி வரை என் வயிறு பசியை
எனக்கு உணர்த்த சற்றே மறந்து போனது.
‘அனுபவித்து எழுதுங்கள்’ என்பதே
அவரின் முதல் சாராம்சமாக இருந்தது.
எழுதுபவர்கள் முதலில் நிறைய
வாசிக்க வேண்டும். அதிலும், வாசிப்பை ரசித்து நேசியுங்கள் என்றார். அந்த
ரசனைத்தன்மை தான் கதைக்கு உரமாக தேவைப்படுகிறது என்பதை அவருக்கே உரிய நடையில்
சுவைபட தெரிவித்தார்.
தம் வாழ்வில் நடைபெற்ற சில முக்கிய
நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அவர் விளக்கியது அவரின் சான்றாமையை காட்டியது. அவரின்
அர்ப்பணிப்பு உணர்வையும் இறை பக்தியையும் மெய்சிலிர்க்க கவனித்துக்
கொண்டிருந்தேன். அதனால் இடையில் அவர் என்னை பேசச் சொன்ன போது கூட உணர்வற்று
நின்றுவிட்டேன். அவரின் அளுமையின் வசீகரம் எங்கள் அனைவரையும் கட்டிப் போட்டது.