Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, July 11, 2014

கலைஞர் டி.வி யில் நான்

வணக்கம்,
              கலைஞர் டி.வி யில் நாளை (13.7.2014) காலை 10.00 மணிக்கு லியேனியின் “ நல்லா பேசுங்க - நல்லதே பேசுங்க “ நிகழ்ச்சியில் நான்



https://www.youtube.com/watch?v=5Wz4GHTKW10

Monday, July 7, 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்திய பாராட்டு விழா


 நெய்வேலியில் 6.7.2014 அன்று  N L C  நிறுவனத்தின்
புத்தக கண்காட்சி திடலில் N L C  நிறுவன நிதித்துறை இயக்குநர்

திரு,ராகேஷ் குமார் அவர்கள் தலைமையில்

முதன்மை விருந்தினர் திரு,S.சுரேஷ் குமார்,IAS

மாவட்ட ஆட்சித் தலைவர், (கடலூர் மாவட்டம் )
அவர்கள் என்னை பாராட்டி கேடயமும்,பொற்கிழியும்
தந்து  கெளரவித்தனர்

பெண்மையை மதிப்போம்


எங்களுக்கும் உங்களுக்குமிடையே
மாறுபட்டு நிற்பது
சில மெல்லிய படைப்பு முடிச்சுகளே
அதை நீர் அறிந்தவராவீர்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எத்தனை எத்தனை சேதிகள்?
பெண்கள் மீதான அலைவரிசை
மாறிப் போனதன் அபத்தமே
பெருகிப் போன இத்துணை 
வன்கொடுமைகள்

சகோதரனாக சிநேகிதனாக
கணவனாக சகமனிதனாக
பார்த்து பழகிய கண்கள்
பலவேளைகளில் சந்தேகித்து நிற்கிறது
கொடூரனாய் இருக்குமோ எனும்
அச்சம் தோய்ந்த பார்வையில்...
எங்கள் இயல்பு தொலைந்துபோகும் 
தருணங்கள் அவை

பட்டுப்புழுவாய் வாழ்ந்த நாங்கள்
பட்டாம்பூச்சிகளாய் தற்போதே 
மகிழ்ந்திருக்கிறோம்
மீண்டுமொரு கூட்டுப்புழு 
வாழ்க்கையை பரிசளிக்காதீர்
உங்கள் சுவடுகளை நீங்களே 
இழந்தவர்களாவீர்


 நன்றி : தின மலர்-பெண்கள் மலர்

சிறகு உதிர் காலம்

29.6.2014 தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை விரைவில்