Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Wednesday, November 28, 2012

விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

        

       சமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வு எழுதினேன்.
எங்கள் அறைக்கு கண்காணிப்பாளராக வந்த ஆசிரியை
குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்ட பின்பும் ஒஎம்ஆர் [OMR]
ஷீட்டை கொடுக்கவேயில்லை.அனைவரும் வரட்டும்,
 வந்தவுடன் எல்லோருக்கும் ஒன்றாக விளக்கம் சொல்லி
கொடுத்து விடுகிறேன் என காலம் தாழ்த்தினார். பின்
ரவுண்ட்ஸில் வந்த மற்றொரு ஆசிரியையின் நேரம்
ஆகிவிட்ட்து,கொடுத்து விடுங்கள்என்ற அறிவுறுத்தலின்
பேரில் கொடுத்தார்.  இது கூட பரவாயில்லை. தேர்வு
முடிவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் அடிக்கப்படும்
“வார்னிங் பெல்லை இறுதி மணி என நினைத்து
அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கிவிட்டார்.
              அறையை விட்டு பாதி பேர் கலைந்த
தருவாயில் தான் அவருக்கே தெரிய வந்தது, அது
5  நிமிடத்திற்கு முன் அடிக்கப்படும் எச்சரிக்கை மணி
என்று.  பின், எல்லோரும் உள்ளே வாருங்கள், தலைமை
ஆசிரியர் பார்த்தால் பிரச்சனை என அழைப்பு விடுத்தார்.
விடைத்தாளை திரும்ப எங்களிடம் கொடுக்கவும்
இல்லை அதற்காக ஒரு மன்னிப்பு கோரலும் இல்லை.
               5 நிமிடங்கள் என்பது இது போன்ற
அரசுத் தேர்வுகளில் எவ்வளவு முக்கியம் என்பது
அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தேர்வுகளில்
கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்கள் முதலில்
சரியான விதிமுறைகளை  தெரிந்து கொண்டு
வாருங்கள்.  சிரமப்பட்டு படித்து  வரும்
தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.


                       




                         





Thursday, November 1, 2012

காத்திருப்பு


                      


            “இப்ப வந்தவங்கள்ல யார் முதல்ல வந்த்துஅந்த
விஸ்தாரமான மருத்துவமனை ரிசப்ஷனில் நர்ஸ் வந்து கேட்டதும்
 நான் தான் சிஸ்டர் என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்து
வருவதற்குள் என் மகன் கணேஷின் பெயரைக் கொடுத்தேன்.
            சொல்லிவிட்டு பெரியவரின் முகத்தைப் பார்க்காமல்
இருக்கைக்கு வந்து கணேஷை கொஞ்சுவது போல் நடித்தேன். எதேச்சையாக பட்டது அந்தப் பெருசின் தீர்க்கமான பார்வை.  இருக்கட்டுமே, அந்த பெருசுக்கு வீட்டில் என்ன அப்படி வெட்டி முறிக்குற வேலை இருக்கப் போகிறது,  நம்ம மாதிரி ஆயிரம் வேலை காத்திருக்குமா என்ன?  குழந்தையை வெச்சிக்குனு நம்ம படுற அவஸ்தை அந்த கிழத்துக்கு இல்லையே.  எனக்கு அப்புறம் தான் போய் மருத்துவரைப் பாக்கட்டுமே.  குடியா மூழ்கிடப் போகுது.
            கிழம் என்னிடம் வாக்குவாதம் ஏதும் செய்யவில்லை.  நானும் கண்டுக்காமல் அலைபேசியை   நோண்டிக் கொண்டிருந்தேன்.  பெயர் அழைத்ததும் புயலென சீறி முழுதும் குளிரூட்டப்பட்ட மருத்துவர் அறையினுள் நுழைந்தேன்.  சிகிச்சைக்குப் பின் வெளியேறிய போது “மருத்துவர் சாப்பிடச் சொல்கிறார், பத்து நிமிடங்கள் அகும், காத்திருங்கள்என நர்ஸ் சொன்னது காதில் தேன் ஊற்றியது போல் இருந்தது.
           அப்பா, நாம தப்பிச்சோம்.  இந்நேரம் நியாயப்படி அந்தப் பெருசு போயிருந்தா இன்னொரு அரைமணி நேரம் காத்திருந்திருப்போம்.  பொய் சொன்னாலும் இம்முறை பொருந்தச் சொன்னோம்.  என் பொய்க்கு நானே நியாயம் கற்பித்து சப்பைக்கட்டு கட்டிக் கொண்டேன்.  மனதில் அரை மணி நேரத்தை மிச்சப்படுத்திய உற்சாகக் களிப்பு.
          மூச்சு வாங்கியபடி மறுபடியும் மருத்துவமனையினுள் நுழைந்தபோது என்னை ஆட்டிப்படைத்த அந்த 20 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது,  தவறவிட்ட அலைபேசியை கொளுத்தும் வெயிலில் லொங்கு லொங்கென மிதிவண்டியில் தேடி அலைந்த்தில் உடலெல்லாம் எரிந்த்து.  ஊசி குத்தப்பட்ட கணேஷிற்கு தேய்த்துவிட வேண்டி மருத்துவரின் மேஜை மேல் வைத்ததாக ஞாபகம் வரவே வந்தேன்.
              அறையினுள் நுழைந்தால் மேஜையின் கீழே விழுந்திருந்த அலைபேசியின் பக்கத்தில் அந்தப் பெரியவரின் கால்கள் இருந்தது.  மருத்துவரின் அனுமதியோடு முதியோரின் கால்களை ஒத்தச் சொல்ல யத்தனிக்கையில் ஏனோ என்னிடம் வார்த்தைகள் வரவில்லை.  இப்போதும் அவரிடம் அதே தீர்க்கப் பார்வை.  என் மனதில் இருந்த குப்பையை வெளியே எடுத்து கொட்டும்படியாக இருந்தது அந்தப் பார்வை.