Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, January 25, 2011

தனிக்குடித்தனம்



         டெலிபோனில் உணர்ச்சிப்பிழம்பாய்
குமுறிக் கொண்டிருந்தாள் ஜானகி...

     ”என்னங்க...ரெண்டு வீட்லயும் நம்மைப்பிரிச்சு
வெச்சது போதும்.இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால
உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது!”
“எனக்கு மட்டும் உன்னை விட்டு பிரிஞ்சிருக்க ஆசையா?
என்ன பண்றது,வீட்டு சூழ்நிலை...”

       “என்ன பெரிய சூழ் நிலை? நமக்கு இந்த சொந்த பந்தம்
எதுவும் தேவையில்ல. நம்ம உணர்ச்சிகளைபுரிஞ்சுக்காத
இவங்களுக்காக நாம ஏன் பிரிஞ்சிருக்கணும்? நாம
தனிக்குடித்தனம் போயிடுவோம்!”

        “என்னது...தனிக்குடித்தனமா?”

        ”ஏன் பயப்படுறீங்க?”

       “ஊர் அசிங்கமா பேசாதா?”

       “பேசினா பேசிட்டு போகட்டும்.ஊருக்காகவா நாம
வாழறோம்?உங்களப் பார்க்காம்,உங்களோட பேசாம
வாழறது ஒரு வாழ்க்கையா?வீட்ல நீங்க பேசறீங்களா,
நான் பேசட்டுமா?”

      “சரி... நானே பசங்ககிட்ட பேசறேன்.

   இதுவரைக்கும் நீ பெரியவன்கிட்டயும் நான் சின்னவன்கிட்டயும்
இருந்ததெல்லாம் போதும்.எனக்கு வர்ற பென்ஷன்ல
நிம்மதியா வாழலாம்.வேலைக்கு போற ரெண்டு மருமகளுக்கும்
தான் கஷ்டமா இருக்கும்.இருக்கட்டும்...
   இனியும் உன்னை நான் கஷ்டப்படுத்தினா, நாம
 நாற்பத்தங்சு வருசமா சேர்ந்து வாழ்ந்தவாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லாம போயிடும்.சீக்கிரமே தனி வீடு
பார்த்து கூட்டிட்டு போறேன்.தயாரா இரு!”

         மனதிலிருந்த பாரம் நொடியில் இறங்கியவராய்
பட்டென ரிசீவரை வைத்தார்,முதியவர் ராமரத்தினம்.


 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

1 comment:

  1. மிகச் சிறந்த சிறுகதை பவித்ரா. வாழ்த்துக்கள். word verificationஐ நீக்கிடுங்களேன்.

    ReplyDelete