Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, December 21, 2010

செல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்

    ஒரு தரம் சீமந்த விழாவிற்காக ஆரணியிலிருந்து
வேலூருக்கு புறப்பட வேண்டி பேருந்து நிலையத்தில்
காத்திருந்தோம்.முகூர்த்த நாள் என்பதால் பயங்கர
கூட்டம்.

   வேலூர் வண்டி வரும் சத்தம் கேட்டு ஒரு கூட்டமே
முண்டியடித்து ஓடியது.என் கணவரும் இடம் பிடிக்க
வேண்டி ஓடினார்.இடம் பிடித்து ஏறி உட்கார்ந்ததும்
தான்செல்போன் இருக்கிறதா என சரிபார்த்தார்.
செல்போனை காணவில்லை.பெரும் பொக்கிஷத்தை
இழந்து விட்டதுபோல் முகம் வாடி விட்டது அவருக்கு.

     உடனே என்னுடைய செல்லில் இருந்து அவர்
நம்பருக்கு போன் போட்டார்.பேருந்தில் யாரெனும்
வைத்திருந்தாலும்கண்டுபிடித்துவிடலாம் என எண்ணி.
ரிங் போய் கொண்டேஇருந்தது.யாரும் எடுக்கவில்லை.
பேருந்தினுன் ‘ நொய்நொய்’ என இரைச்சல்
இருந்ததே தவிர அவரின்ரிங்டோன் ஓசை இல்லை.
பேருந்திற்கு வெளியே யாரேனும் வைத்துள்ளனரா என
ரிங் போட்டபடியே பேருந்தை விட்டு இறங்கி
கவனித்தார்.அப்பொழுதும் சத்தம் கேட்கவில்லை.

      நாங்கள் தேடுவது அறிந்து சக பயணிகளும்
பரபரப்பானார்கள்.’ நேற்று கூட ஒரு செல்போன்
திருடி5 செல்லுடன் அகப்பட்டாள்’ எனச் சொல்லி
என் வயிற்றில் அமிலத்தை கரைத்தார்.டிரைவர் வந்து
வண்டியில் அமர்ந்துவிட்டார்.போனது போனது தான்
என எண்ணி இவரும் பேருந்தில் ஏறிக் கொண்டார்.

       இங்கே தான் எங்கோ இருக்கிறது என்பதாய்
உள்ளுணர்வுஎனக்குள் தவிப்பாய் மாற’வேண்டுமானால்
வண்டியை விட்டு இறங்கி இன்னும் சற்று நேரம் பார்த்து
விட்டு செல்லலாமே’என கூறிக்கொண்டிருந்தேன்.

     ஆனால் அவரோ,கண்ணை மூடி சில் வினாடிகள்
அப்படியே தியானத்தில் அமர்ந்துவிட்டார்.பேருந்து
மெல்லஆடி அசைய புறப்பட எத்தனித்தது.திடீரென
சாமி வந்தவராக‘இரு வரேன்’ என்றபடி எழுந்து ஓடினார்.

      வண்டி கிளம்ப,இருப்பதா இறங்குவதா என
தெரியாமல் நான்.போர்டில் தொங்கியபடி வண்டியை
பிடித்தவர்’கிடைச்சிடுச்சி’என வாயெல்லாம் பல்லாக
செல்போனை கைகளில் உயரேதூக்கிக் காட்டினார்.
எங்களுடைய  மகிழ்ச்சியையும் மீறி சக பயணிகள்
தான் அதிகம் சந்தோஷித்தனர்.

     பஸ் பிடிக்க வேண்டி எதிர்புறம் இருந்த
கால்வாயைஎகிறி குதித்து கடக்கையில் பக்கவாட்டில்
 இருந்த குப்பைமேட்டில்அவரின் செல்போன் விழுந்து
விட்டிருக்கிறது.குப்பையின் மேல்கிடக்கவே யாரும்
கவனிக்கக் காணோம்.

  ‘நீங்க ஏதோ நல்லது செஞ்சிருக்கீங்க சார்,அதான்
உங்க பொருள் திரும்ப பத்திரமா கிடைச்சிடுச்சி’ என
நல்லவார்த்தை சொல்லி வழ்த்தினார் ஒரு பயணி.
ஒரு ஆசிர்வாதம் போல் மனம்நிறைந்தது எங்களுக்கு.

       ஒரு தரம் தன் கடையின் எதிரில் அனாதையாய்
கிடந்த செல்லை அதிலிருந்த ஒரு நம்பரில் பேசி
சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த நிகழ்வை பயணத்தில்
என்னிடம் பகிர்ந்து கொண்டே வந்தார்.அதோடும்
இதோடும் முடிச்சு போட்டு பார்த்து சிலிர்த்தேன் நான்.

No comments:

Post a Comment