Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, December 18, 2010

வசந்தத்தை பரிசளிப்போம்



காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுவதும் விலையாட்டு.......
               அற்புதமாகப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதி.
ஆனால்,இன்று எத்தனை பொற்றோர்கள் பிள்ளைகளை
ஆடி,ஒடி விளையாட அனுமதிக்கின்றனர்?

       பள்ளி விட்டு வந்ததும் அந்த கிளாஸ்,இந்த கிளாஸ்,
டியூஷன்  என்று ஒரு நிமிடம் கூட பிள்ளைகளை சும்மா
இருக்க விடுவதில்லை.பள்ளிகளில் கேட்கவே வேண்டாம்
பி.டி ,பீரியடைக்கூட  விடாமல் கிளாஸ் எடுப்பார்கள்.

      இன்று நிறைய குழந்தைகள் மன அழுத்த பிரச்சனையில்
சிக்கி தாங்களும் தவித்து பெற்றோரையும் பரிதவிக்க
வைக்கும் திணறலுக்குக் காரணமே, ”விளையாட்டுகளை
ஒரம்கட்டியுள்ள தவறுதான்.”

       உடற்பயிற்சி,திட்டமிடல்,பலத்தைப் பயன்படுத்துதல்,
ஒற்றுமையைப் பேணுதல்,திறமையை நிரூபித்தல் என
பன் முகங்களைகொண்ட்து விளையாட்டு.

      இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை வாரி
வழங்கும் கற்பக விருட்சம் நம் பிள்ளைகளுக்கு கோலி,
பச்சகுதிரை, சடுகுடு,கண்ணாமூச்சி போன்ற விளை
யாட்டுகள்ளொல்லாம் தெரியுமா?

      மனதிற்கும் உடலுக்கும்பாதிப்பை ஏற்படுத்தும்
கம்ப்யூட்டர், கேம்ஸ்களும் தான் அவர்களின் உலகமா.
நன்கு ஓடுவதல் உடல்பலம், கூடிபேசுவதால் மொழிப்
பயிற்ச்சி, கேள்விக்கு பதில் சொல்கையில் கற்ப்பனெய்
வளர்ச்சி, பொதுவான ஆர்வம்,குழுவாய் பிரிகையில்
நல்லிணக்கம்...இப்படி,வளர் இளம் பருவத்தை
ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் விளையட்டுக்களை
அலட்சியபடுத்தலமா?

       பிள்ளைகள் சோர்ந்து போகாமல் இருக்கவும்,அடுத்த
வாரத்திற்கான புத்துணர்ச்சியை ரீச்சாஜ் செய்வதர்குமே
வார இறுதியில் விடுமுறை தினங்களிலாவது குழந்தைகளை
நன்கு விளையாட அனுமதியுங்கள்.

      வீடியோகேம்ஸ்களும் ,டி.வி.சேனல்களும்,போட்டிகள்
நிறைந்த படிப்பும், உலகமும் நம் குழந்தைகளின்
விளையாடும் நேரத்தை தின்று ஏப்பம் விட்டுள்ளன.இதை
விளையாட்டாக எண்ணாமல் நம் குழந்தைகளுக்கு
ஆரோக்கியமான விளையாட்டுகளை அறிமுகம் செய்வோம்.
வாழ்கையின் வசந்தமான பக்கங்களைப் பரிசளிப்போம்.


நன்றி; தினமலர்-பென்கள் மலர்

No comments:

Post a Comment