Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Monday, January 24, 2011

சர்வர்



      காமாட்சி,எத்தனை முறை தான் ராமுகிட்ட சொல்றது.
 நானே முதலாளி கையையும் காலையும் புடிச்சி என்க்குன்னு
போடுற சாப்பாட்ட அவன் சாப்பிட ஏற்பாடு பண்ணியிருக்கேன்
தெரியுமா?

       நெற்றிக் கோடுகள் சுருங்க கூறினார் சதாசிவம்.
  ‘ நான் என்னங்க செய்யட்டும்.கேக்க மாட்டேங்குறான்’
அலுத்துக் கொண்டாள் காமாட்சி.

    கெவுரு கூழும் நொய்க் கஞ்சியும் என் உடம்புக்கு
பழகிப் போனது.ஒட்டிப் போன இந்த உடம்புக்கு இதே
போதும்.மாடாட்டும் கூலி வேலை செய்யுறான்,பாவம்.
மூணு பதார்த்தத்தோட ஹோட்டல்ல போடுற ருசியான
சோத்த திங்க அவனுக்கு கசக்குதா? சரி, நான்
ஹோட்டலுக்கு கிளம்புறன்.அவன வந்து மரியாதையா
சாப்பிடச் சொல்லு.

       வியர்வை வழிந்தோடிய உடலை துண்டால்
ஒற்றியபடி வந்தமர்ந்தான் ராமு.

      அம்மா...சோத்தைப் போடு மணியாச்சு.
டேய் ராமு,அப்பா தான் அவ்வளவு தூரம் சொல்றாரே,
ஹோட்டல்ல வந்து சாப்புடுன்னு...

     அம்மா,பெத்த புள்ள தான் அப்பனை உக்காத்தி
வெச்சி சோறு போடணும்.ஏதோ நம்ம குடும்ப கஷ்டம்,
அப்பா சர்வர் வேலை பாக்குறாரு.அங்க அப்பா எனக்கு
சோறு போட்டு தண்ணி ஊத்தி எச்சலை எடுக்குறத
என்னால பாத்து கிரகிச்சுக்க முடியலம்மா.அவரையே
அங்க சாப்பிட்டுக்கச் சொல்லு.

      யார் பக்கம் பேசுவது?குழம்பிப் போனாள் காமாட்சி.

 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

2 comments:

  1. பவித்ரா கதை எளிமை, அருமை. தினமலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி கோநா

    ReplyDelete