Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, April 7, 2012

வழுக்குமரமான படித்துறை


         

         சமீபத்தில் இராமேஸ்வரம் கோவிலுக்கு
குடும்பத்துடன் சென்றிருந்தேன்.அங்கே தினமும்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுகின்றனர்.
அப்படிப்பட்ட இட்த்தில் படித்துறை எப்படி இருந்தது
தெரியுமா? படி தெரியாத அளவிற்கு முழுதாக பச்சை
பசேலென பாசி படிந்திருந்தது.
     அதை பார்க்காமலும் கவனக்குறைவாலும் எண்ணற்ற
பக்தர்கள் வழுக்கி விழுந்தனர். நாங்கள் அந்த படித்துறையில்
இருந்த ஒரு மணி நேரத்தில் கிட்ட்த்தட்ட நூறு
பேருக்கு மேல் வழுக்கி விழுந்தனர்.அவ்வளவு பாசி.
யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என மனது ’திக்திக்’
கென அடித்துக் கொண்டது.
           வட நாட்டிலிருந்து வந்திருந்த சேட்டு
ஒருவர் இப்படி விழுந்து வைக்க,திடீரென அவருக்கு நெஞ்சு
வலி வந்துவிட்டது. நல்ல காலம்! அருகில் குளித்துக் கொண்டிருந்த
மருத்துவர் ஓடி வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.
சேட்டு குடும்ப பெண்கள் எல்லோரும் அழுது தீர்த்து
விட்டனர்.
         அந்த படித்துறையை வடநாட்டு மகான்
ஒருவர் தான் கட்டி பக்தர்களுக்காக தானம்
கொடுத்துள்ளார்.அதை கோவில் நிர்வாகமோ நகராட்சி நிர்வாகமோ
கண்டுகொள்வதே இல்லை போலும். அப்பப்பா... ஊர் திரும்பும் போதும்
ரயிலில் இப்படி வழுக்கி விழுந்தவர்கள் பற்றிய கனவே வந்து
பயமுறுத்தியது. நீங்களும் பார்த்து போங்க...

No comments:

Post a Comment