Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Sunday, December 19, 2010

திருவண்ணாமலை தீபம்

       இந்த வருடம் [2010] கார்த்திகை தீபதிரு
நாளில் மாலை 5.30 மணிக்கெல்லாம் விளக்கு
ஏற்ற ஆயத்தமாகிக் கொண்டு இருந்தேன்.என் பெரிய
மகள் ஒவ்வொரு அகலுக்கும் திரி போட்டுக்
கொண்டிருந்தாள்.

     நான் விளக்குகளில் நெருப்பு ஏற்றிக் கொடுக்க
அவள் எங்கள் வீட்டு படியிலும் பக்கவாட்டு சுவரிலும்
வரிசையாக அடுக்கினாள்.அதற்குள்,திருவண்ணாமலை
தீபம் டி.வி.யில் ஒளிப்பரப்பாகவே 'சீக்கிரம்  வா
பார்த்து விட்டு வரலாம்' என நான் அவசரப்படுத்தினேன்.

    “ஓ...இன்னிக்கு தி.மலை தீபமா?” என்றாள்.

    “பின் மகாதீபம் இல்லாமல் வேறென்ன?
அதனால் தான் எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்றுகிறோம்”
என்றேன் விளக்கத் தோரணையில்.

    “அப்போ அந்த தீபம் என்னிக்கு மம்மி”-
மறுபடியும் அவள்.
     
     “எந்த தீபம்?”

    “அதான் ஒரு ஆம்பளை இருந்தா 5 விளக்கு,
2 ஆம்பளை இருந்தா 10 விளக்குனு நடுத்தெருவுல
ஏத்துவாங்களே...அப்புறம் தேங்காவுல திரி போட்டு
அரிசி மேலே ஏத்துவாங்களே அதெல்லாம் எப்ப வரும்”
என அப்பாவியாக கேட்டாள்.

    அவள் கேட்டதற்கும் டி.வி.யில் தீபம் ஏற்றுவதற்கும்
சரியாக இருந்தது.அரோகரா என சொல்லக் கூட
இயலாமல் வயிற்றை பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தேன்.
நான் இப்படி சிரிப்பதை பார்த்து என் இரு மகள்களும்
சிரிப்பு ஜோதியில் ஐக்கியமாயினர்.

    விளக்கேற்றும் வேளையில் யாரும் அழக்கூடாது
என்பார்கள்.நல்ல வேளை நாங்கள் விழுந்து விழுந்து
சிரித்துக் கொண்டு தான் இருந்தோம்.

    பிறகு யோசித்தேன்.வதந்திகளுக்கு பிறகான
செயல்களெல்லாம் பிள்ளைகளின் மனதில்
கூட எப்படி ஊடுருவி வேர் பரப்பி இருக்கின்றன என்று.

    தன்னுடைய கேள்விக்கு அப்படி என்ன தான் ‘பவர்’
என தெரியாமலே என்னை பார்த்து உற்சாகமாகி விட்டாள்
என் மூத்த மகள்.

1 comment: